உடை

Article on other languages:

del.icio.us del.icio.us
Digg Digg
Furl Furl
Reddit Reddit
Rojo Rojo
Add to OnlyWire
குளிர்கால உடை அணிந்துள்ள குழந்தை.

உடலுக்கு மேல் அணியப்படும் துணிகளை உடை எனலாம். காலணிகளும், அணிகலன்களும் உடை என வகைப்படுத்தப்படுவதுண்டு. உடை மனித அடிப்படைத் தேவைகளில் ஒன்று.


உடை உடுக்கப்படுவதற்கு தொழில்பாடு, சமூகக் காரணிகள் உண்டு. உடை உடலை வெளிச் சூழலில் இருந்து பாதுகாக்கின்றது. வெளி மாசுகளில் இருந்தும், காலநிலை (குளிர், வெயில், மழை) மாற்றங்களில் இருந்தும் பேணுகின்றது. குறிப்பாக நுளம்பு போன்ற பூச்சிகளில் இருந்தும், கேடு விளைவிக்க கூடிய வேதிப்பொருட்களில் இருந்தும் உடை உடலை காக்கின்றது. விசேட உடைகள் தீ, ஆயுதங்கள் போன்றவற்றில் இருந்தும் மனிதனை பாதுகாக்கின்றன.


உடையின் சமூக பண்பாட்டு அம்சமும் முக்கியம். உடையற்ற நிர்வாணமான மனிதன் வெட்கம் அடைவதாகவும், உடை வெட்கத்தை நீக்குவதாகவும் கருதப்படுகின்றது. இந்தக் கருத்தை கிறிஸ்தவ தொன்மவியலில் காணலாம். ஏவாள் கடவுளின் சொல்லைக் கேளாமல் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்டதால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வெட்கம் வந்து தமது பாலுறுப்புகளை இலைகளால் மறைத்தனர் என்பர்.


பாலியல் உறுப்புக்களை மறைப்பது நற்பழக்கமாக அனேக சமூகங்களினால் கருதப்படுகின்றது. உடை பாலியல் நோக்கில் மனிதன் தூண்டப்படாமல் இருப்பதற்கு உதவுவதாகவும் கருதப்படுகின்றது. சில முஸ்லீம் பெண்கள் முகம் உட்பட உடலை மறைத்து உடையணிவதற்கு ஆண்களை பாலியல் உணர்ச்சிக்கு உந்தாமல் தடுப்பதற்கே எனப்படுகின்றது.


உடை தனிமனித அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு கருவியாக பயன்படுத்தமுடியும். சமூக அந்தஸ்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் பயன்படுகின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.